ஜோஷிமத் கிராமத்தில் மீண்டும் நடுரோட்டில் 6 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஷாமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் கிராமத்தில் கடந்த ஆண்டு வீடுகள் மற்றும் கட்டிடங்களில் கடுமையான விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வாழுவதற்கு தகுதியில்லாத 181 வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அப்போது அங்குள்ள ஒரு தெருவில் திடீரென 6 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் அந்தப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.