சத்தீஸ்கரில் 6 நக்சலைட்கள் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
சத்தீஷ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் சிக்குர் பட்டி மற்றும் புஷ்பகா கிராமத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் நக்சலைட்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் என்கவுண்டரில் ஆறு நக்சலைட்களை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு கொலை செய்தனர். அதில் ஒரு பெண் நக்சலைட்டும் உள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்டர் எம்பி தொகுதியில் வருகிற 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.