சென்னையில் புதிதாக 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னையில் புதிதாக கோட்டூர்புரம், கோயம்பேடு, புழல், நீலாங்கரை, தரமணி மற்றும் மீனம்பாக்கம் என 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார்.
அபிராமபுரம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையமும், கோயம்பேடு காவல் நிலைய வளாகத்தில் கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையமும், புழல் காவல்நிலைய வளாகத்தில், புழல் அனைத்து மகளிர் காவல் நிலையமும், திருவான்மியூர் காவல் நிலைய வளாகத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையமும், தரமணி காவல் நிலைய வளாகத்தில் தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையமும், விமானநிலையம் காவல் நிலைய வளாகத்தில் மீனம்பாக்கம் அனைத்து மகளிர்காவல் நிலையமும் என 6 புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் காவல் ஆய்வாளர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டனர்.