ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை;படகுகளை நாட்டுடைமையாக்க உத்தரவு

February 6, 2024

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 23 ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22 ஆம் தேதி 480 விசைப்படகுகளில் 3000 கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி பெற்று கடலுக்கு சென்றனர். அப்போது நள்ளிரவில் கச்சத்தீவுக்கு நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் 23ஆம் தேதி அதிகாலை இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு அங்குள்ள […]

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 23 ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22 ஆம் தேதி 480 விசைப்படகுகளில் 3000 கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி பெற்று கடலுக்கு சென்றனர். அப்போது நள்ளிரவில் கச்சத்தீவுக்கு நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் 23ஆம் தேதி அதிகாலை இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு அங்குள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் எல்லை தாண்டிய குற்றத்திற்காக அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்கள் ஆறு பேரையும் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார் .மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகு இலங்கை நாட்டுடமை ஆக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu