சென்னையில் வாகன விதிமீறல் 60 சதவீதம் குறைந்தது

December 28, 2022

சென்னையில் வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபடுவது 60 சதவீதம் குறைந்தது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய அபராத நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.1000மும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் […]

சென்னையில் வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபடுவது 60 சதவீதம் குறைந்தது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய அபராத நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.1000மும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் ரூ 17 கோடியே 47 லட்சம் ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி கூறுகையில், போக்குவரத்து விதிகளை மீறினால் அபராத தொகை 5 முதல் 10 மடங்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை தவறாமல் கடைபிடித்து வருகிறார்கள். இதன் காரணமாகவும், போக்குவரத்து போலீசாரின் தொடர் விழிப்புணர்வு காரணமாகவும் போக்குவரத்து விதிமீறல்கள் சென்னையில் 60% குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu