தமிழக போக்குவரத்து துறைக்கு 150 தாழ்தள பேருந்துகள் உள்பட 600 புதிய பேருந்துகள் வாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் 10 ஆயிரம் பேருந்துகள் 15 ஆண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பேருந்துகளை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளதால் தமிழக அரசின் போக்குவரத்து துறை பழைய பேருந்துகளுக்கு பதில் புதிய பேருந்துகளை வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
சட்டசபையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இப்போது முதல் கட்டமாக 600 பேருந்துகளை கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. இதில் 150 பேருந்துகள் முழுமையான தாழ்தள பேருந்துகளாக வாங்கப்படுகிறது. புகழ்பெற்ற பேருந்து பாடி கட்டும் நிறுவனங்களும் பாடி கட்டுவதற்கு டெண்டரில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.