இ-சேவை மையங்களில் விரைவில் 600 வகையான சேவைகள் வழங்கவுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், தமிழக அரசின் 235 சேவைகள், 9720 இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர தமிழகத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்பகுதிகளுக்கும் விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு மனுக்களை பரிசீலித்து இ-சேவை மையங்கள் தொடங்க அனுமதியளிக்கப்படுகிறது. தற்போது 235 சேவைகள் வழங்கப்படுகிறது. விரைவில் பணம் செலுத்துதல் உள்ளிட்ட 600 சேவைகள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர மத்திய அரசின் சேவைகளையும் இதில் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.