டெல்டா மாவட்டங்களில் மழையால் 60 ஆயிரம் ஏக்கர் நெற்கதிர்கள் நாசம் 

February 3, 2023

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்துள்ளன. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,மழை காரணமாக மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் தலா 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்கதிர்களும், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்கதிர்களும் வயலில் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். […]

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்துள்ளன.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,மழை காரணமாக மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் தலா 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்கதிர்களும், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்கதிர்களும் வயலில் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வேளாண்துறை களப்பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வுக்குப் பின்னரே பாதிப்பு குறித்த நிலவரம் தெரிய வரும். பாதிப்பு இருந்தால் அதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’’ என்றனர். மேலும், மழை காரணமாக நேற்று பல இடங்களில் நெல் கொள்முதல் பணியும் நடைபெறவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu