மாலி - பயங்கரவாத தாக்குதலில் 64 பேர் உயிரிழப்பு

September 8, 2023

ஆப்பிரிக்க நாடான மாலியில், நேற்று பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 49 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஜிஹாத் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். மாலி நாட்டு அரசாங்கம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. நைஜர் ஆற்றை ஒட்டிய பகுதிகளில் நேற்று இரட்டை தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. வடக்கு காவ் அருகே உள்ள பம்பா பகுதியில் இருந்த ராணுவ முகாம் ஒன்றை குறிவைத்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மற்றொன்று, […]

ஆப்பிரிக்க நாடான மாலியில், நேற்று பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 49 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஜிஹாத் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். மாலி நாட்டு அரசாங்கம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

நைஜர் ஆற்றை ஒட்டிய பகுதிகளில் நேற்று இரட்டை தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. வடக்கு காவ் அருகே உள்ள பம்பா பகுதியில் இருந்த ராணுவ முகாம் ஒன்றை குறிவைத்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மற்றொன்று, நைஜர் ஆற்றில் சென்று கொண்டிருந்த திம்புக்தூ படகில் நிகழ்த்தப்பட்டுள்ளது. அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu