தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தினசரி இயங்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 640 பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கிறிஸ்மஸ் பண்டிகை வருகிற 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இம்முறை கிறிஸ்துமஸ் பண்டிகையானது சனி,ஞாயிறு வார விடுமுறை தினங்களோடு இணைந்து வருகின்றது. ஏற்கனவே பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம்,தூத்துக்குடி மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள தினசரி இயக்கக்கூடிய 2100 பஸ்களுடன் கூடுதலாக 22ஆம் தேதி 350 பஸ்களும், 23ம் தேதி 290 பஸ்களும் என மொத்தம் 640 பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.