இந்தியாவிலேயே முதல்முறையாக பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தியாவில் பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் தற்போது பிகாரில் அமலில் இருக்கும் 50 சதவீத இட ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சேர்ப்பதன் மூலம் இட ஒதுக்கீடு 75 சதவீதமாக உயரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த இட ஒதுக்கீடு உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்த மசோதா அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான உறுப்பினர்களால் ஆதரவு பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டது.














