அயோத்தியில் 650 கோடி ரூபாய் செலவில் கோவில்களின் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
அயோத்தியில் கடந்த ஆண்டு முதல் கோவில்களின் அருங்காட்சியகத்தை கட்டமைப்பதற்கான திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த திட்டத்தை கட்டமைப்பதற்கான ஒப்பந்தத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கான ஒப்புதலை சட்டசபை வழங்கியுள்ளது. அதன்படி இந்த திட்டத்திற்காக உத்தர பிரதேச அரசின் சுற்றுலாத்துறை சார்பில் டாடா சன்ஸ்க்கு 90 ஆண்டுகள் லீசுக்கு நிலம் வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டுக்கு ரூபாய் ஒன்று மட்டும் வசூலிக்கப்பட இருக்கிறது. இதற்காக டாடா சன்ஸ் தனது கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூபாய் 650 கோடியை செலவு செய்ய உள்ளது. மேலும் இத்துடன் உத்தர பிரதேசம் மாநிலத்தின் வளர்ச்சி திட்டம் ஒன்றும் டாடா சன்சுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தத் திட்டத்தின் மதிப்பு ரூபாய் 100 கோடியாகும். இதேபோன்று லக்னோ, பிரயாக்ராஜ் மற்றும் கபில் வஸ்து ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சேவைகளை அறிமுகப்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது