தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் 6585 பட்டாசு கடைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து பட்டாசு மற்றும் ஜவுளி வியாபாரங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தற்காலிக பட்டாசு கடைகளை திறப்பதற்கான விதிமுறைகள் தீயணைப்புத்துறை மூலம் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. மொத்தம் 9,177 விண்ணப்பங்களில் 6,585க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் 681 விண்ணப்பங்கள் பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருப்பதற்காக நிராகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, தமிழகம் முழுவதும் 8,000க்கும் மேலான விண்ணப்பங்கள் வந்தன, இதில் 7,200க்கு அனுமதி வழங்கப்பட்டது. தீபாவளிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 321 பள்ளிகள், 61 கல்லூரிகள் மற்றும் 598 பொதுஇடங்களில் நடத்தப்பட்டு, 61,100 பேர் பங்கேற்றுள்ளனர்.