லாவோஸில் சைபா் மோசடி மையங்களில் கடத்தப்பட்டு கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 67 இந்தியர்கள் வியன்டியனேவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்திய தூதரகம், லாவோஸ் அதிகாரிகளுடன் இணைந்து, சைபா் மோசடியில் சிக்கியவர்களுக்கு உதவி வழங்கி, துரிதமான மீட்புப் பணியை மேற்கொண்டது. மீட்கப்பட்டவர்கள் போக்கியோவிலிருந்து வியன்டியனேவுக்கு கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன. இந்திய தூதரகம், இளைஞர்களை சந்தித்து, அவர்களை இந்தியாவுக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்ப உறுதி செய்தது. இந்த நடவடிக்கையின் போது, 924 இந்தியர்களில் 857 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். லாவோஸ் அதிகாரிகளுக்கு உடனடி உதவிக்காக இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.