ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு

February 25, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை மாலை 5 மணியோடு தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு பெறுகின்றன. தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.64.34 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக […]

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை மாலை 5 மணியோடு தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு பெறுகின்றன. தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.64.34 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதே போல் 688 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக 547 வழக்குகள் தமிழ்நாடு மதுவிலக்கு தடுப்பு பிரிவில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu