தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் மொத்தம் 69.46 சதவீத வாக்கு பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 39 மாவட்டங்களுக்கான வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் தர்மபுரி மாவட்டம் முதலிடத்தில் 81.48 சதவீத வாக்குப்பதிவை பதிவு செய்துள்ளது.