சீனாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிட்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தின் தெற்கு பகுதியில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிட்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் சேதம் ஆகின. இதில் மக்கள் காயமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொளியாக இந்திய தலைநகர் டெல்லியிலும் நள்ளிரவு நேரத்தில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி என்.சி.ஆர் பகுதியில் இரவு 11.45 முதல் 12 மணிக்குள் மக்கள் கடும் அதிர்வுகளை உணர்ந்துள்ளனர். இருந்த போதிலும் டெல்லியில் எந்த சேதமும் ஏற்படவில்லை.