திருவண்ணாமலையில் பாறை உருண்டு வீடு மீது விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த நிலையில் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 டிசம்பர் 2024 அன்று கனமழையின் காரணமாக பாறை உருண்டு விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பெரியவர்கள் மற்றும் 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவராண நிதியிலிருந்து வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.