நகோர்னா- கராபக் பகுதியில் இருந்து சுமார் 70% பழங்குடி மக்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அஜர்பைஜானுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையே நகோர்னா- கராபக் பகுதி பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது இந்த பகுதியை அஜர்பைஜான் மீண்டும் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த ஆர்மீனியர்கள் 70 சதவீதத்திற்கும் மேலானோர் அங்கிருந்து வெளியேறினர்.இந்நிலையில், சில காலம் முன் கரோபக் பகுதியில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அஜர்பைஜான் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதனை சமாளிக்க முடியாத ஆர்மீனிய படையினர் அஜர்பைஜான் படையினரிடம் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். அதையடுத்து அஜர்பைஜான் அந்த பகுதி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அறிவித்தது. பின்னர் சுமார் 30 ஆண்டுகளாக அந்த பிராந்தியத்தின் ஆட்சி அமைப்பாக இருந்து வந்த நகோர்னா கராபக் குடியரசை வரும் ஜனவரி 1ஆம் தேதி கலைக்க அதன் அதிபர் சாமுவெல் வியாழக்கிழமை அரசாணை பிறப்பித்தார். இந்நிலையில், அந்த பகுதியில் இருந்து சுமார் 70% பழங்குடி மக்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அவர்கள் ஆர்மீனியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர் என தெரிகிறது. அஜர்பைஜான் அரசால் துன்புறுத்தப்படலாம் என்ற பயத்தில் அவர்கள் வெளியேறியதாக கூறப்படுகிறது.