காங்கோவில் போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் ஒன்பது ராணுவ வீரர்கள் உட்பட 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காங்கோ தலைநகர் கின்ஷாசாவில் கின்சல் கிராமத்தில் கடந்த சில வருடங்களாகவே இரண்டு சமூகங்களுக்கு இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அப்பகுதியின் குடிமக்கள் மற்றும் காங்கோ ஆற்றின் அருகே வசிக்கும் யக்கா இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு இடையே நில உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் காங்கோ ஜனாதிபதி முன்னிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதிலும் இரு சமூகங்களுக்கு இடையில் சண்டை ஓய்ந்தபாடு இல்லை. தொடர்ந்து மோதல் தீவிரமடைந்து வருகிறது. காங்கோ ராணுவம் இந்த வன்முறையை அடக்குவதில் தோல்வியை அடைந்தது.
இந்நிலையில், காங்கோவின் கிழக்கு பகுதியில் போராளிகள் ஆயுதங்களுடன் போரிட்டு வருகின்றனர். இது மேற்கு பகுதிக்கும் பரவியுள்ளது. இதையடுத்து நடந்த தாக்குதலில் ஒன்பது ராணுவ வீரர்கள் உட்பட 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இப்பகுதியில் வன்முறையை கட்டுப்படுத்த காங்கோ ராணுவம் சிரமப்பட்டு வருகிறது.