ஓசூரில் டாட்டா நிறுவனம் ஐபோன் உதிரிபாகம் தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக 7000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓசூரில் ஐபோன் உதிரி பாகம் தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக டாட்டா நிறுவனம் கூடுதலாக ஏழாயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த ஆலை விரிவாக்கத்தால் அடுத்த ஆறு ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் நாளை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.