நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து சுமார் 18 பயணிகள் பலி. மேலும் 70க்கும் மேற்பட்டோர் மாயம்.
நைஜீரியாவில் கரீம் லாமிடோ மாவட்டத்தில் மையோ ரெனிவா என்ற கிராமத்திற்கு ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தது. இதில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பயணிகள் அதிகம் பேர் இருந்ததால் படகு ஆற்றில் கவிழ்ந்தது. அதிலிருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர். இந்த சம்பவம் அறிந்து மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 14 பேரை மீட்டனர். இந்த விபத்தில் 18 பேர் பலியானார்கள். சுமார் 70-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். எனவே பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. ஆற்றில் மீட்பு பணியினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மொத்தம் 14 பேர் இந்த படகில் பயணம் செய்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர்.














