ஜம்முவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர்.
ஜம்முவில் வைஷ்ணோதேவி கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஜஜ்ஜார் கோட்லி அருகே விபத்துக்குள்ளானது. விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துப் பகுதியில் காவல்துறையினருடன் பொது மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் ஜம்மு ஜெஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.