இந்திய கடற்படையை சேர்ந்த 8 முன்னாள் வீரர்கள் கத்தார் நாட்டில் கைது செய்யப்பட்டனர். உளவு பார்த்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு இந்திய அரசு சார்பில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பயனாக, அனைவரும் விடுவிக்கப்பட்டு, தற்போது 7 பேர் நாடு திரும்பி உள்ளனர்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், கத்தார் அரசு, 8 இந்திய கடற்படை வீரர்களை விடுதலை செய்துள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அரசின் ராஜ்ஜிய தலையீட்டால் இது நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.