ஆந்திர சட்டசபையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரா சட்டப்பேரவை தலைவர் சீதாராம் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏக்களை புகார்களின் அடிப்படையில் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டுள்ளார். அதன்படி இவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு முன் புகார் விளக்கம் அளிக்க கோரி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆந்திராவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு இடைத்தேர்தல் தேவை இல்லை எனவும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.