சென்னை கௌரவ் ரயிலில் பயணித்த 80 பேருக்கு உடல்நிலை பாதிப்பு

November 29, 2023

சென்னையிலிருந்து புறப்பட்ட கௌரவ் ரயிலில் பயணம் செய்த 80 பேருக்கு திடீரென வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. தனியார் மூலம் முன்பதிவு செய்து குஜராத் மாநிலத்தில் உள்ள வழிபாட்டு தளத்திற்கு சென்னையில் இருந்து புறப்பட்ட கெளரவ் ரயிலில் பயணம் செய்த 80 பேருக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் ரயில் பயணிகள் சாப்பிட்ட உணவு கெட்டுப் போனதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை அடுத்து புனே ரயில்வே நிலையத்தில் மருத்துவ […]

சென்னையிலிருந்து புறப்பட்ட கௌரவ் ரயிலில் பயணம் செய்த 80 பேருக்கு திடீரென வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.

தனியார் மூலம் முன்பதிவு செய்து குஜராத் மாநிலத்தில் உள்ள வழிபாட்டு தளத்திற்கு சென்னையில் இருந்து புறப்பட்ட கெளரவ் ரயிலில் பயணம் செய்த 80 பேருக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் ரயில் பயணிகள் சாப்பிட்ட உணவு கெட்டுப் போனதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை அடுத்து புனே ரயில்வே நிலையத்தில் மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த ரயிலில் ஆயிரம் பேர் பயணித்து வந்தனர். இதில் பலருக்கும் வயிற்றுப்போக்கு, மயக்கம், வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் விசாரணையில் ரயிலில் எந்த உணவக வசதியும் இல்லை என்பதும் பயணிகள் நடுவழியில் உணவு வாங்கி சாப்பிட்டு உள்ளனர் என தெரிய வந்துள்ளது. பின்னர் அது எங்கிருந்து வந்தது என்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu