அருணாச்சல பிரதேசத்தில் 8 வாக்கு சாவடிகளில் மறு தேர்தல் நடைபெற்றது.இதில் 80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த 19ஆம் தேதி இரண்டு மக்களவைத் தொகுதிகள் மற்றும் 50 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட எட்டு வாக்குச்சாவடிகளில் வன்முறை நிகழ்ந்ததால் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி அந்த தொகுதிகளில் நேற்று மறு வாக்கு பதிவு காலை 6:00 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடந்தது. இதில் 79.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.