வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை 8 மற்றும் ஜூலை 9 ஆகிய விடுமுறை, முகூர்த்த நாட்களை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்காக இதுவரை 23,626 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.