போலீஸ் காவலில் இளம் பெண் இறந்ததற்கு கண்டணம் தெரிவித்து ஈரான் முழுவதும் பல நகரங்களில் 2 வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்றது. அதில் 83 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் குழு ௯றியுள்ளது.
22 வயதான ஈரானிய பெண் மஹ்சா அமினி , தெஹ்ரானில் கட்டுப்பாட்டை மீறி பொருத்தமற்ற உடை அணிந்ததற்காக இஸ்லாமிய போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து ஈரான் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. போராட்டங்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஈரான் மனித உரிமைகள் குழு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏராளமான கலவரக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளதாக அரசு தொலைக்காட்சி கூறியது.
அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை மற்றும் அதிகாரிகளின் கடுமையான அடக்குமுறைக்கு மத்தியில் ட்விட்டரில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் தெஹ்ரான், கோம், ராஷ்ட், சனந்தாஜ், மஸ்ஜித்-இ-சுலைமான் மற்றும் பிற நகரங்களில் உள்ள மதகுரு ஸ்தாபனத்தின் வீழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தது. இதற்கிடையில், ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி அமினியின் மரணத்தை கண்டிக்கும் வகையில் ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகளை விதிக்க விரும்புவதாகக் கூறினார்.
நார்வேயின் ஆஸ்லோவில் உள்ள ஈரானிய தூதரகத்திற்குள் நுழைய முயன்ற 95 பேரை கைது செய்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது. 2019 இல் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்திற்குப் பிறகு அமினியின் மரணம் பெரிய போராட்டத்தை தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.