அமெரிக்காவில் 8300 கோடி மோசடி செய்த இந்திய தொழிலதிபர்

July 4, 2024

அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் ஒருவர் 8300 கோடி ரூபாய் மதிப்பில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவருக்கு 7.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ பகுதியில், ரிஷி ஷா என்ற இந்திய வம்சாவளி தொழிலதிபர் வசித்து வருகிறார். அவுட்கம் ஹெல்த் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், நோயாளிகள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தி, மருந்து விற்பனைக்கு துணை செய்கிறது. மருந்து நிறுவனங்களின் விளம்பரங்களை ஒளிபரப்பி வருவாய் […]

அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் ஒருவர் 8300 கோடி ரூபாய் மதிப்பில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவருக்கு 7.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பகுதியில், ரிஷி ஷா என்ற இந்திய வம்சாவளி தொழிலதிபர் வசித்து வருகிறார். அவுட்கம் ஹெல்த் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், நோயாளிகள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தி, மருந்து விற்பனைக்கு துணை செய்கிறது. மருந்து நிறுவனங்களின் விளம்பரங்களை ஒளிபரப்பி வருவாய் ஈட்டி வந்தது. இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, போலி ஆவணங்கள் மூலம் முதலீட்டாளர்களும் இருந்து அதிக பணம் பெற்றுள்ளது. ஆல்பாபெட், கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற பிரபலமான நிறுவனங்களும் இந்த பட்டியலில் அடங்கும். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், ரிஷி ஷாவுக்கு 7.5 ஆண்டுகளும், அவுட் கம் ஹெல்த் இணை தோற்றுனர் பிராடு பர்ட்டிக்கு 2.3 ஆண்டுகளும், ஷ்ரத்தா அகர்வாலுக்கு 3 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu