இந்தியாவைச் சேர்ந்த 8,330 பேர் 90 நாடுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவையில் வெளிநாட்டில் சிறைகளில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது. வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் எழுத்துப்பூர்வமாக,
இந்தியாவைச் சேர்ந்த 8,330 பேர், 90 நாடுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 1611 பேர் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளனர். நேபாளத்தில் 1222 பேர், கத்தாரில் 696 பேர், குவைத்தில் 446 பேர், மலேசியாவில் 341 பேர், பாகிஸ்தானில் 308 பேர், அமெரிக்காவில் 294 பேர், பஹ்ரைனில் 277 பேர், பிரிட்டனில் 249 பேர் ஜெயில்களில் உள்ளனர் மேலும் 178 பேர் சீனாவிலும், 157 பேர் இத்தாலியிலும், 139 பேர் ஓமனில் உள்ள சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர் என பதில் அளித்துள்ளார்.