வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 850 சிறப்பு பேருந்துகள் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படுகிறது.
வருகின்ற 16,17 ஆம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினமும் அதனை தொடர்ந்து 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை காரணமாகவும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் பயணம் செய்வார்கள்.
இதனை கருத்தில் கொண்டு தினசரி பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க தமிழக போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தினசரி இயங்கும் பஸ்களுடன் 15 ஆம் தேதி கூடுதலாக 650 பஸ்களும், 16ஆம் தேதி கூடுதலாக 200 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இது கோவை மதுரை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1750 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டப்பட்டுள்ளன. மீண்டும் பதினெட்டாம் தேதி பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தேவைக்கு ஏற்ப அங்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.