நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலை தொல்லியல் துறையில் பட்டப்படிப்பு பயிலும் மாணவி சுகன்யா வகுப்பறையில் பேராசிரியர்கள் கற்றுக்கொடுத்த நுட்பத்தைப் பயன்படுத்தி வல்லவன் கோட்டையில் ஒரு பழமையான கல்வெட்டைக் கண்டுபிடித்தார்.
இந்த கல்வெட்டு இவ்வூருக்கு வெளியே மாடசாமி கோவிலில் உள்ளது. இந்த கல்வெட்டைக் கோட்டை மாடசாமி என்ற பெயரில் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்தக் கல்வெட்டு கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதாவது 1228 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டறிந்தனர்.