தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்த்தி அரசாணை வெளியிடபட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.இந்த அகவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி என்பது ஏ.ஐ.சி.பி.ஐ என்ற குறியீடு மூலம் கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த புள்ளிகளின் உயர்வு மற்றும் சரிவை கொண்டு அகவிலைப்படி உயர்வு கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் பெறுபவர்களின் அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது