கானாவில் தங்கச் சுரங்கத்துக்குள் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
கானாவின் ஒபுவாசி நகரில் உள்ள 'ஆங்கிலோகோல்டு அஸ்யன்டி' தங்க வயலில் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு, சிலர் தங்கத்தை வெட்டி எடுக்க சுரங்கத்துக்குள் நுழைந்துள்ளனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி 9 பேரை கொல்லும் நிலைக்குள்ளாகியுள்ளனர். சிலர் காயமடைந்தனர். சிறு சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம், ஆயுதமற்ற தொழிலாளர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றம் சாட்டியது. இது குறித்து கானா அதிபர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.