ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் புயல் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான மழை பொழிவு மற்றும் இடி மின்னல் இருந்ததால், அங்கு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று பதிவான அதி கனமழை விளைவாக, 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்றும் 23 விமானங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிலையமான பிராங்க்போர்ட் விமான நிலையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. விமான சேவையில் ஏற்பட்ட இந்த மாறுதல்களால் பயணிகள் மிகவும் குழப்பமடைந்துள்ளனர். பல பயணிகள் விமான நிலையத்திலேயே காத்திருக்கின்றனர். நிலைமை சீரான உடன் அவர்களுக்கான புதிய விமான சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியை தாக்கிய புயலால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. அவசர கால அடிப்படையில் அங்கு மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.