90% காசா மக்கள் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு புலம் பெயர்ந்து தவித்து வருகின்றனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
அக். 7-ஆம் தேதிக்குப் பிறகு காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் காரணமாக, 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு புலம் பெயர்ந்து தவித்து வருகின்றனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும், நோய்த் தடுப்பு திட்டங்கள் செயல்படுத்த முடியாததால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக காஸாவில் ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 மாதங்கள் நீடித்த தாக்குதலில் 40,265-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.