பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் கடந்த வாரம் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா விளக்கம் அளிக்க கோரி பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் எதிர்கட்சி எம்பிக்கள் 14 பேர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இந்த சஸ்பெண்டை திரும்ப பெற வலியுறுத்தியும் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால் இரண்டு நாட்கள் அவை அலுவல்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று பாராளுமன்றம் அவை கூடிய நிலையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை எதிர்க்கட்சி எம்பிக்கள் மொத்தம் 92 பேர் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பாராளுமன்ற நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.