இன்று அதிகாரபூர்வமாக ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது.
‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற முழக்கத்துடன் இன்று ஜி-20 தலைமையை இந்தியா ஏற்கிறது. இதற்காக நாடு முழுவதும் 100 நினைவுச் சின்னங்களை ‘ஜி-20 லோகோ’வால் ஒளிரச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக நாடு முழுவதும் 50 நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன.
முதன் முதலாக ஜி-20 ‘ஷெர்பா’ கூட்டம் உதய்பூரில் டிசம்பர் 4 முதல் 7ம் தேதிகளில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் ஜி-20 மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் வரும் 5ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.