டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர்கள் ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தில், ஹேக்கர்கள் சீனாவை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விசாரித்து வந்த சைபர் துறை வல்லுநர்கள், எம்பரர் டிராகன்ஃபிளை மற்றும் பிரான்ஸ் ஸ்டார்லைட் (DEV-0401) ஆகிய இரண்டு சீன அமைப்புகள் இந்த ஹேக்கிங்கில் ஈடுபட்டதாக கூறுகிறார்கள். இவர்கள், சர்வதேச அளவில், மருந்து துறை சார்ந்த நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. அத்துடன், லைப் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு மீதும் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹேக்கர்கள் கேட்ட ரூபாயை தர மறுத்ததால் அவர்கள் டார்க் வெப்பில் தரவுகளை விற்பனை செய்ய தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஹேக் செய்யப்பட்ட சர்வர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், தற்போது வரை, மருத்துவமனை பணிகள் மேனுவலாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.