சர்வதேச அளவில் முதலீட்டு வங்கி நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, தனது 2% பணியாளர்களுக்கு பிங்க் ஸ்லிப் வழங்கியுள்ளது. அதாவது, 1600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
கொரோனா பரவலின் போது, பணி நீக்க நடவடிக்கைகளை சற்று நிறுத்தி வைத்திருந்த மோர்கன் ஸ்டான்லி நிறுவனம், மீண்டும் தற்போது பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக, கடந்த வாரம், மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் கோர்மன், பணி நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். நிறுவனத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். இதன் மூலம், அண்மையில் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள, மெட்டா, அமேசான், ட்விட்டர், ஸ்னாப்சாட், சிஎன்என், பெப்சிகோ நிறுவனங்களின் வரிசையில் மோர்கன் ஸ்டான்லி இணைந்துள்ளது.