ஜேபீ (Jaypee) குழுமம், தனது 5666 கோடி மதிப்பிலான சிமெண்ட் வணிகத்தை டால்மியா சிமெண்ட் பாரத் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்பதாக அறிவித்துள்ளது. இதில் 9.4 மில்லியன் டன் திறன் கொண்ட சிமெண்ட் ஆலைகள், 6.7 மில்லியன் டன் அளவிலான கிளிங்கர் மற்றும் 280 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் ஆகியவை அடங்கும் என்று ஜேபீ குழுமம் தெரிவித்துள்ளது.
கடனில் தத்தளிக்கும் ஜெயப்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது விற்பனை திட்டம் இதுவாகும். ஏற்கனவே, 2 மில்லியன் டன் திறன் கொண்ட சிமெண்ட் ஆலையை, டால்மியா குழுமத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் விற்றது. டால்மியா சிமெண்ட் நிறுவனம், ஜேபீ சிமெண்ட் வணிகத்தை கையகப்படுத்தியதன் பின்னர், அதன் பங்கு மதிப்பு 3% உயர்ந்து, 1906.30 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.