பரந்தூர் விமான நிலையம் : 12 கிராமங்களில் 4,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு

August 5, 2022

சென்னையின், மீனம்பாக்கம் பகுதியில், விமான நிலையம் இயங்கி வருகிறது. சென்னையை சுற்றியுள்ள பல பகுதியை சேர்ந்தவர்கள் இங்கிருந்து விமான பயணம் செய்து வருகின்றனர். விமான நிலையத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மீனம்பாக்கம் பகுதியை ஒட்டி இருக்கும் பகுதிகளில், 'கிரின் பீல்டு ஏர்போர்ட்' என்னும் புதிய விமான நிலையம் துவக்குவதற்கு, மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு, பன்னுார், பரந்துார் திருப்போரூர் மற்றும் படாளம் ஆகிய நான்கு இடங்களை […]

சென்னையின், மீனம்பாக்கம் பகுதியில், விமான நிலையம் இயங்கி வருகிறது. சென்னையை சுற்றியுள்ள பல பகுதியை சேர்ந்தவர்கள் இங்கிருந்து விமான பயணம் செய்து வருகின்றனர். விமான நிலையத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, மீனம்பாக்கம் பகுதியை ஒட்டி இருக்கும் பகுதிகளில், 'கிரின் பீல்டு ஏர்போர்ட்' என்னும் புதிய விமான நிலையம் துவக்குவதற்கு, மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு, பன்னுார், பரந்துார் திருப்போரூர் மற்றும் படாளம் ஆகிய நான்கு இடங்களை மத்திய அரசிற்கு மாநில அரசு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், பரந்துார் பகுதியில் விமான நிலையம் அமைய உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பரந்துார் கிராமத்தினர் கூறுகையில், 'பரந்துார் கிராமத்தில், சென்னையின் 2வது விமான நிலையம் அமைவது, அனைத்து தரப்பினரிடையும் வரவேற்பு பெற்று உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து இனி எளிதாக விமானத்தில் பயணம் செய்ய முடியும்' என்றனர்.
பரந்துார் விமான நிலையத்திற்கு, 12 கிராமங்களில், 4,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், 2,400 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலங்களாகும். மீதமுள்ளவை விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களாகும்.

நிலம் கையப்படுத்த உள்ள இடங்களை விரைவில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். விவசாயம் செய்யும் நிலங்கள் மற்றும் தரிசு நிலங்கள் என பல தரப்பு நிலங்கள் கையகப்படுத்த உள்ளது.

இதற்குரிய, இழப்பீடு தொகை முறையாக வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில், கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், பலர் விளை நிலங்களை விமான நிலையத்திற்கு கொடுத்து விட்டு, வருமானதுக்கு தவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.விமான நிலையத்திற்கு, நிலம் வழங்குவோரின் குடும்பத்திற்கு தலா ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என, விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu