கடந்த 5 நிதி ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவின் கேள்வி நேரத்தின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "வங்கிகள் வாயிலாக கடந்த 5 நிதி ஆண்டுகளில் வழங்கப்பட்ட கடன் தொகையில், 10 லட்சத்து 9,511 கோடி ரூபாய் வாராக் கடன் தொகையை ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. வங்கிகளின் வரவு - செலவு கணக்குகளை சீர் செய்ய இது போன்ற நடவடிக்கை வழக்கமாக எடுக்கப்படும். அதே நேரம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும் கடன் பெற்றவர்கள் அதை திருப்பிச் செலுத்துவற்கு பொறுப்பாவர். கடன் தொகைகள் திரும்ப வராததற்கு வங்கி அதிகாரிகள் காரணமாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 5 நிதி ஆண்டுகளில் வாராக் கடன்களுக்கு காரணமான 3,312 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.