யுபிஐ செயலிகள் மூலம் பணபரிவர்த்தனை செய்வதில் கட்டுப்பாடுகள்  -  ரிசர்வ் வங்கி 

December 20, 2022

யுபிஐ செயலிகள் மூலம் பணபரிவர்த்தனை செய்வதில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. யுபிஐ செயலிகள் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு பெரும்பாலான மக்கள் மாறி வருகின்றனர். என்.பி.சி.ஐ. எனும் தேசிய கட்டண கழகத்தின் தரவுகளின்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 11 லட்சம் கோடி அளவிற்கு யுபிஐ செயலிகளில் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் என்.பி.சி.ஐ. நடத்திய ஆலோசனையில் யுபிஐ செயலிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டுப்பாடாக ஒரு நாளைக்கு ஒரு […]

யுபிஐ செயலிகள் மூலம் பணபரிவர்த்தனை செய்வதில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

யுபிஐ செயலிகள் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு பெரும்பாலான மக்கள் மாறி வருகின்றனர். என்.பி.சி.ஐ. எனும் தேசிய கட்டண கழகத்தின் தரவுகளின்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 11 லட்சம் கோடி அளவிற்கு யுபிஐ செயலிகளில் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் என்.பி.சி.ஐ. நடத்திய ஆலோசனையில் யுபிஐ செயலிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டுப்பாடாக ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே யுபிஐ செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். மேலும், நாள் ஒன்றுக்கு ஒரு நபர் அதிகபட்சமாக 20 முறைகள் மட்டுமே போன் பே , கூகுள் பே செயலிகளில் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இதன் விதிமுறைகள் வங்கிகளை பொருத்தும், செயலிகளை பொருத்தும் மாறலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu