இந்தியாவின் முதல் 'ஸ்மார்ட்' மின்சார பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
'இ.கே.ஏ., மொபிலிட்டி' எனும் மின்சார வாகன நிறுவனம், கனடாவின் டிரக் நிறுவனமான 'நுா போர்ட் ரோபாடிக்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து இரண்டாம் கட்ட 'அடாஸ்' வசதிகளை கொண்ட மின்சார பேருந்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இ.கே.ஏ., மொபிலிட்டி நிறுவனர் சுதிர் மேத்தா கூறுகையில், ‘உலகளவில் யோசித்து, இந்திய அளவில் செயல்படுத்து' என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றி நாட்டின் பொதுப் போக்குவரத்தை அதிநவீன தொழில்நுட்பம் வாயிலாக பாதுகாப்பானதாக மாற்றம் செய்வதே எங்களது நோக்கமாகும்.
மேலும் இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கனரக வாகனத்தில் புதிய பிரிவை உருவாக்கவும் தொடர்ந்து கவனம் செலுத்துவோம் என்று அவர் கூறியுள்ளார்.