புகார்களை கேட்க சமூக ஊடக கணக்குகளை துவக்கியது மின் வாரியம்

August 10, 2022

மின்தடை உள்ளிட்ட புகார்களை பெறவும், மக்களிடம் ஆலோசனைகளை கேட்கவும், சமூக வலைதளங்களில் தமிழக மின் வாரியம் அதிகாரப்பூர்வ கணக்குகளை துவக்கிஉள்ளது. மின் தடை உள்ளிட்ட புகார்களை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும் 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத்தில், 94987 94987 என்ற மொபைல்போன் எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்கும் வசதி உள்ளது. இன்றைய சூழ்நிலையில், பலரும் மொபைல் போன் மற்றும் கணினியில் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். இதனால், மத்திய அரசின் அனைத்து துறைகளும், அந்த […]

மின்தடை உள்ளிட்ட புகார்களை பெறவும், மக்களிடம் ஆலோசனைகளை கேட்கவும், சமூக வலைதளங்களில் தமிழக மின் வாரியம் அதிகாரப்பூர்வ கணக்குகளை துவக்கிஉள்ளது.

மின் தடை உள்ளிட்ட புகார்களை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும் 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத்தில், 94987 94987 என்ற மொபைல்போன் எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்கும் வசதி உள்ளது.

இன்றைய சூழ்நிலையில், பலரும் மொபைல் போன் மற்றும் கணினியில் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். இதனால், மத்திய அரசின் அனைத்து துறைகளும், அந்த துறைகளின் அமைச்சர்களும், 'டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்குகளை துவக்கிஉள்ளனர். அவற்றில் தங்கள் துறையில் நடக்கும் நிகழ்வுகள், புதிய திட்டங்கள், அறிவிப்புகளை பதிவிடுகின்றனர்.தமிழக அரசும், அமைச்சர்களும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், மின் வாரியம் சார்பில் சமூக வலைதளங்களில் கணக்கு துவக்கப்படாமல் இருந்தது.தற்போது, 'டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்' ஆகிய சமூக வலைதளங்களில் மின் வாரியம் கணக்குகளை துவக்கியுள்ளது.
அதில், மின் சாதன பராமரிப்புக்காக மின் வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள், 'டிஜிட்டல்' மின் கட்டண விழிப்புணர்வு உள்ளிட்ட விபரங்கள் பதிவிடப்படுகின்றன.

இதில் பதிவிடப்படும் புகார் மீது விரைந்து நடடிக்கை எடுக்கவும், மின் வாரிய செயல் திறனை மேம்படுத்துவது தொடர்பாக தெரிவிக்கப்படும் ஆலோசனைகளை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu