புதன்கிழமை அன்று, சில மணி நேரங்களுக்கு, உலக அளவில் ட்விட்டர் சேவை முடங்கியது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, அமெரிக்காவில் 10000, ஜப்பானில் 2500, பிரிட்டனில் 2500 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. ட்விட்டர் தளத்தில் பதிவாகியுள்ள கம்ப்ளைன்ட் அடிப்படையில் இந்த எண்ணிக்கை தரப்பட்டுள்ளது.
ட்விட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து உடனடியாக தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், சில மணி நேரங்களுக்கு பின்னர், ட்விட்டர் செயல்பாடுகள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பின. இதன் போது, ஆயிரக்கணக்கான பயனாளர்கள், ட்விட்டர் தளத்தில் உள் நுழைய முடியவில்லை என்று தெரிவித்திருந்தனர். அதற்கு, எலான் மஸ்க், தன்னால் ட்விட்டர் தளத்தை இயக்க முடிவதாக பதிவு செய்தார். அதன்பின்னர் பதிவிட்ட செய்தியில், ட்விட்டர் பேக் எண்ட் சர்வரில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வர பட்டுள்ளதாகவும், இனிமேல் ட்விட்டர் தளம் கூடுதல் வேகத்துடன் செயல்படும் எனவும் தெரிவித்தார்.