உக்ரைன் போரில் 7 ஆயிரம் அப்பாவி மக்கள் பலி: ஐ.நா. தகவல்

December 29, 2022

உக்ரைன் போரில் தற்போது வரை அப்பாவி மக்கள் சுமார் 7 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா போரை தொடங்கியது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் ரஷியா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. சுமார் 7 ஆயிரம் பேர் இந்த நிலையில் உக்ரைன் போரில் தற்போது வரை அப்பாவி […]

உக்ரைன் போரில் தற்போது வரை அப்பாவி மக்கள் சுமார் 7 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா போரை தொடங்கியது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் ரஷியா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. சுமார் 7 ஆயிரம் பேர் இந்த நிலையில் உக்ரைன் போரில் தற்போது வரை அப்பாவி மக்கள் சுமார் 7 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- போர் தொடங்கிய பிப்ரவரி 24-ந் தேதியில் இருந்து கடந்த 26-ந் தேதி வரையில் போரில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 6,884 பேர் கொல்லப்பட்டனர், 10,947 பேர் காயமடைந்தனர். இது தவிர ரஷிய படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 483 பேர் கொல்லப்பட்டனர். 1,633 பேர் காயமடைந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu