இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா சார்பில் 75 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களைக் கூட பல மணி நேரம் காத்திருந்து வாங்கும் நிலை நிலவுகிறது. இலங்கைக்கு நீண்ட கால கடன் உட்பட பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.
இந்நிலையில், இலங்கையின் பொது போக்குவரத்தைப் மேம்படுத்த 75 நவீன ரக பேருந்துகளை மத்திய அரசு தற்போது வழங்கியுள்ளது. இந்த ஆண்டு 500 பேருந்துகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக 75 பேருந்துகளை இலங்கைக்கான இந்திய துாதரக அதிகாரி அந்த நாட்டு அரசிடம் வழங்கினார்.